தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- என்பதை காட்டும் நடுகற்கள்
தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை. இந்த உலகத்தில் நீதிநூல்கள் காட்டும் வாழவேண்டிய அறநெறியில் நின்று மற்றவர்களையும் அதே வழியில் வாழ்கின்றவன், பூமியில் வாழும்போதே வானுலகத்தில் உள்ள தேவர்கள் ( வான் உலகில் தேவர்கள் வாழ்வார்கள், அவர்கள் தலைவன் இந்திரன் என்பது குறள் 25) போலே வைத்து மதிக்கப்படுவான். வைக்கப்படும் என்ற அமைப்பில் வள்ளுவர் மேலும் 3 குறள்களில் வைத்து உள்ளார் வாழும்போது உடன் இருப்போர் அப்படி வைத்துப் பார்ப்பர் என அமைத்துள்ளார். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல். ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி. நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை...