Posts

தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- என்பதை காட்டும் நடுகற்கள்

Image
தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை. இந்த  உலகத்தில் நீதிநூல்கள் காட்டும் வாழவேண்டிய அறநெறியில் நின்று மற்றவர்களையும் அதே வழியில் வாழ்கின்றவன், பூமியில் வாழும்போதே வானுலகத்தில் உள்ள தேவர்கள் ( வான் உலகில் தேவர்கள் வாழ்வார்கள், அவர்கள் தலைவன் இந்திரன் என்பது குறள் 25)  போலே வைத்து மதிக்கப்படுவான். வைக்கப்படும் என்ற அமைப்பில் வள்ளுவர் மேலும் 3 குறள்களில் வைத்து உள்ளார்  வாழும்போது உடன் இருப்போர் அப்படி வைத்துப் பார்ப்பர் என அமைத்துள்ளார்.    ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல். ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்;  உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி. நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை...

திருக்குறள் போற்றும் மெய்யியல் சனாதனம் காப்போம்

 திருக்குறள்  போற்றும் மெய்யியல் சனாதனம் காப்போம் 

திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராம‌ணர்க‌ளும்

திருவள்ளுவர் ஒரு நல்ல நாடு, நல்ல அரசாட்சியின் வேர் எனக் கூறுவது வள்ளுவம் மோசமான் அரசன் கொடுங்கோலன மூட ஆட்சியின் தீமை எனக் கூறுவது ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ( 560 கொடுங்கோ ன் மை )  நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். இவை முழுமையாக் சங்க கால தமிழ் அரசனின் அறவழியே ஆகும்  புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன

Image
  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை. நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப்படுவான். "வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல். ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்;  உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி. நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை  மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர் உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை. இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்...

திருக்குறள் காட்டும் ஷத்திரியருக்கான அறம்

திருக்குறள் காட்டும் ஷத்திரியருக்கான அறம் பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.  குறள் 633:  அமைச்சு. மணக்குடவர் உரை: மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான். பரிமேலழகர் உரை: பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.). மு. வரதராசன் உரை: பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ள...

திருவள்ளுவர் காட்டும் சான்றோர் அறவோர் - காட்சி யவர். கோள்.

 திருவள்ளுவர் காட்டும் சான்றோர் அறவோர் - காட்சி யவர். கோள். கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.  குறள் 699:  மன்னரைச் சேர்ந்தொழுதல்.  மணக்குடவர் உரை: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை: கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.). மு. வரதராசன் உரை: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். மு. கருணாநிதி உரை: ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார...