தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை. இந்த உலகத்தில் நீதிநூல்கள் காட்டும் வாழவேண்டிய அறநெறியில் நின்று மற்றவர்களையும் அதே வழியில் வாழ்கின்றவன், பூமியில் வாழும்போதே வானுலகத்தில் உள்ள தேவர்கள் ( வான் உலகில் தேவர்கள் வாழ்வார்கள், அவர்கள் தலைவன் இந்திரன் என்பது குறள் 25) போலே வைத்து மதிக்கப்படுவான். வைக்கப்படும் என்ற அமைப்பில் வள்ளுவர் மேலும் 3 குறள்களில் வைத்து உள்ளார் வாழும்போது உடன் இருப்போர் அப்படி வைத்துப் பார்ப்பர் என அமைத்துள்ளார். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல். ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி. நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை...
திருவள்ளுவர் ஒரு நல்ல நாடு, நல்ல அரசாட்சியின் வேர் எனக் கூறுவது வள்ளுவம் மோசமான் அரசன் கொடுங்கோலன மூட ஆட்சியின் தீமை எனக் கூறுவது ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ( 560 கொடுங்கோ ன் மை ) நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். இவை முழுமையாக் சங்க கால தமிழ் அரசனின் அறவழியே ஆகும் புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.
Comments
Post a Comment